districts

108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு

தஞ்சாவூர், ஜன.7 - 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்து வதில் 2020 ஆம் ஆண்டை காட்டிலும் 2021 ஆம்  ஆண்டு 34 விழுக்காட்டினர் அதிகரித்துள்ள னர். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை தமிழகத் தில் தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு  முதல்  ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்துபவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு  ஜனவரி தொடங்கி டிசம்பர் 2021 வரை தஞ்சா வூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 398 பேரும்,  திருவாரூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 594 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 27 ஆயி ரத்து 775 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில்  21 ஆயிரத்து 47 பேரும் என மொத்தம் 4 மாவட் டங்களில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 814 பேர் பய னடைந்துள்ளனர்.

இதில், தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், கடந்த 2021 ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையில் பயன டைந்தவர்கள் 1,38,814 பேர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 108  ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் 2020  ஆம் ஆண்டு காட்டிலும் 2021 ஆம் ஆண்டு  34 விழுக்காட்டினர் அதிகமாக பயன்படுத்தி யுள்ளனர். 2021ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை  பயன்படுத்துபவர்களில், இந்த நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 1,38,814  பேர் ஆவர். கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த சேவை யைப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை 91,517 ஆக இருந்தது. இது 2020 ஆம் ஆண்டை காட்டிலும் 2021 ஆம் ஆண்டு 47,297 பேர் அதிக மாக பயன்படுத்தியுள்ளனர். 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டு  34  விழுக்காடு அதிகமாகும்.  கர்ப்பிணிகள்  108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த ஆண்டு 29,600 கருவுற்ற தாய் மார்கள்  பயனடைந்து உள்ளதாகவும், 29,600  கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், இதே  2020 ஆம் ஆண்டு 19,131 பேர் பயனடைந்த னர். இது 2020 ஆம் ஆண்டை காட்டிலும், 2021  ஆம் ஆண்டு 10,469 அதிகமாக பயன்ப டுத்தி உள்ளனர் என்று சுகாதாரத் துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

சாலை விபத்துக்களில் 4 மாவட்டங்களி லும் 17,320 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு 11,029 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். இதில் 2020 ஆம் ஆண்டை காட்டி லும் 2021 ஆம் ஆண்டு 5,591 பேர் அதிகமா கும். 2021 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத் தில் 7,642 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 4,165 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,682 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,831 பேரும் பயனடைந்துள்ளனர்.  அதுபோல் பிரசவ காலத்தில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 4 மாவட்டங்களில் மொத்தம் 29,600 பேர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,593 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 7,263 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,373 பேர்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,371 பேர் என  பயனடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் 4 மாவட்டங்களி லும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 30,775 பேர். இவர்களில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் 12,108 பேர், திருவா ரூர் மாவட்டத்தில் 9,327 பேர். நாகப்பட்டினம்  மாவட்டத்தில் 5,548 பேர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 3,792 பேர் என பயன்பெற்றனர்.  இவ்வாறு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி  முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி  வரை மொத்தம் 1 லட்சத்து 38 ஆயிரத்து 814 பேர்  அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதி காரிகள் தெரிவித்தனர்.