districts

img

ஏற்காடு கோடை விழா பூத்துக்குலுங்கிய மலர்கள்: கோடை விழா தேதியை அறிவிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஏற்காடு கோடை விழாவை எதிர்பார்த்து அங்கு பயிரிடப்பட்ட மலர்கள் பூத்துக் குலுங்கி வருகிறது. அதனை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர் .கோடை விழா தேதியை அறிவிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. மே மாத இறுதியில் வருட வருடம் கோடை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது சுமூகமான சூழல் உள்ளதால் மலர்கண்காட்சி கூடுதல் நாட்கள் சேர்த்து நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

 அதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் 40 வகையான மலர்களை பயிரிடும் பணியை தோட்டக்கலைத் துறையினர் நடவு செய்தனர். தற்போது அந்த மலர்கள் பூத்துக் குலுங்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.

ஏற்காடு கோடை விழாவை விரைவாக நடத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்காடு கோடை விழாவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகளில் கோரிக்கை வைத்துள்ளனர்.

 தமிழகம் முழுவதிலும் இருந்தும் அருகிலுள்ள கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏற்காடு கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் முன் கூட்டியே கோடை விழாவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.