districts

img

சங்ககிரி அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

சங்ககிரி அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள சாமியார் காடு பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் லாரன்ஸ் (38) இவர்  பெயிண்ட் அடிக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி புனித மேரி என்ற ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் டேவிட் லாரன்ஸ்க்கும் மனைவி புனித மேரி க்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் செவ்வாயன்று இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த டேவிட் லாரன்ஸ் தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்ககிரி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது