districts

img

முறையான ஊதியம் கேட்டு போராட்டம்

சேலம், ஜூலை 16- முறையான ஊதியம் மற்றும் பாதுகாப்பு  உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியு றுத்தி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்ட னர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நர சிங்கபுரம் நகராட்சியில் 70க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் கடந்த 18 வருடங்களாக பணியாற்றி  வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்க முறையாக ஊதியமும், பாதுகாப்பு உபகர ணங்களும் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூய் மைப் பணியாளர்கள் பலமுறை அதிகாரிகளி டம் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த தூய்மைப் பணியாளர்கள் திங்க ளன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது, மாதந்தோறும் முறை யான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்சமாக நாளொன்றுக்கு ஊழியமாக ரூ.638  மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகர ணங்கள், சீருடை வழங்க வேண்டும். நிரந்தர பணியிடங்களை ரத்து செய்யும் அரசாணை களை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் சுமார் 18 ஆண்டு காலமாக பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.

முன்னதாக, நடைபெற்ற போராட்டத் திற்கு தூய்மைப் பணியாளர் சங்க தலை வர் பார்வதி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் சத்யா, நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் ந.செந் தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் நிறைவுரையாற்றினார். இதில் ஏராள மான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.