districts

img

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்காடு, ஏப். 17- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. தற்போது கொரோனா பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பின், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் விடு முறை காரணமாக ஏற்காட்டில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏற்காட்டில் படகு இல்லம், ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், n ஜன்ஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர். ஞாயிறன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. சாலை ஓர கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பொதுவாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணி களின் படகு சவாரிக்காக மிதி படகு மற்றும் துடுப்பு படகுகள் உள்ளன. இந்த படகுகள் சுற்றுலா பயணிகளை கவரும் வித மாக வண்ணம் தீட்டப்பட்டு காட்சி யளிக்கின்றன. மேலும் ஏற்காட்டில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிரம்பின. 2 ஆண்டுக்கு பின்னர் ஏற்காடு களை கட்டியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

;