districts

img

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடியை தாண்டியது

சேலம், ஜூலை 22- மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஜூலை 22 அன்று 75  அடியாக உயர்ந்தது. அணைக்கு வந்து கொண்டி ருக்கும் நீரின் அளவு வினா டிக்கு 53,830 கன அடியில் இருந்து 64,033 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை  காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இத னால் காவிரி மற்றும் அதன்  துணை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியின் முக்  கிய துணை நதியான கபினி யில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு, கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பியது. இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண் டுள்ளது.

காவிரியின் குறுக்கே  கர்நாடகாவில் கட்டப்பட் டுள்ளன கே.ஆர்.எஸ் அணை யும் நிரம்பும் நிலையை எட்டி யுள்ளது. எனவே பாது காப்பு கருதி கே.ஆர்.எஸ்  அணையில் இருந்தும் உபரி  நீர் காவிரியில் வெளியேற் றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணை களில் இருந்து வெளியேற் றப்பட்டு வரும் உபரி நீர் கார ணமாக கடந்த சில நாட்க ளாக மேட்டூர் அணைக்கு நீர்  வரத்து அதிகமாக இருக்கி றது.

ஜூலை 22 திங்களன்று அணைக்கு நீர்வரத்து 76,794 கனஅடியாக அதிகரித் துள்ளது. அதிக நீர்வரத்து  காரணமாக மேட்டூர் அணை யின் நீர்மட்டம் திங்களன்று 77 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக வினா டிக்கு ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.