districts

img

ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்

சேலம், ஜூலை 16- வளர்ச்சி திட்டங்களை முறை யாக அமல்படுத்தாத அரசு அதிகாரி களின் அலட்சியத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில், மாற் றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைக்கும் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனா ளிகளுக்கு என வருவாய்த் துறை யின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1500ம், கடும் ஊனமுற் றோருக்கு ரூ.2000 உதவித்தொகை கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இன்று வரை வழங்கப்படவில்லை. இதேபோன்று, நூறு நாள் வேலைத் திட்டத்தில் விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியாண்டில் இன்னும் வேலை வழங்கப்பட வில்லை. மாற்றுத்திறனாளிகளை வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர் களாக கணக்கிட்டு, ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த மாற் றுத்திறனாளிகளுக்கு உடனடியாக ஆய்வுகள் செய்து உடனடியாக வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இதுவரையில் வழங் கப்படவில்லை. மாற்றுத்திறனாளி களை கடுமையாக அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து மாற் றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சி யரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

சேலம் ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலை வர் பி. ஹரிகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இதில், செயலாளர் எம்.குணசேகரன், பொருளாளர் எம்.கனகராஜ், மாவட்ட துணை செய லாளர் அமலா ராணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கணபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.A

ஈரோடு

இதேபோன்று, மாவட்ட அரசு  மருத்துவமனைகளில் நடைபெறும் சான்று வழங்கும் முகாமில் நரம்பியல் மருத்துவர் வருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பயண தூரத்தைக் கணக்கில் கொண்டு கோபி, தாளவாடி, அந் தியூர், கொடுமுடி ஆகிய தாலுக்கா மருத்துவமனைகளில் மாதமிரு முறை அடையாள சான்று உள் ளிட்ட மருத்துவ சான்றுகள் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவின்படி 100 நாள் வேலைக் கான குறைதீர் கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும். மாவட்ட கண்கா ணிப்புக்குழுவில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாவித்திரியை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரளான மாற்றுத்திறனா ளிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்றது. இதனைத் த்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதரத்துல்லா நடத்திய பேச்சு வார்த்தையில், வருவாய் கோட் டாட்சியர் மற்றும் தாலுக்க அளவில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளிக்கப்பட் டது.

தருமபுரி

இதேபோன்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாற் றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலை வர் கே.ஜி.கரூரான் தலைமைவ கித்தார். மாவட்ட செயலாளர் எம். மாரிமுத்து,மாவட்ட பொருளா ளர் ஜி.தமிழ்செல்வி, இடை கமிட்டி தலைவர்கள் கே.சுசிலா, எம்.அண்ணாமலை, பி.காரல் மார்க்ஸ், மாதப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதனைத்தொ டர்ந்து போராட்டம் நடக்கும் இடத் திற்கு வந்த மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலர் சென்பகவள்ளி பேச்சுவார்த் தைக்கு அழைத்தார். அதன் அடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவ லர் பால்பரின்ஸிலி ராஜ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரண்டுவார காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றிதருவதாக உறுதிய ளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். 

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.மு ருகேசன் தலைமை தாங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, கே.தங்கமணி, என்.வேலுச்சாமி, இ.எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். 

இதில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகிகள், குமாரபா ளையம் அர்ஜுனன், அருண்குமார், திருச்செங்கோடு துரைசாமி, சக்தி வேல், சேர்ந்தமங்கலம் ரமேஷ், முருகேசன், பரமத்திவேலூர் நாகேஸ்வரி, குணசேகரன், மோக னூர் மாதேஸ்வரன், பெருமாள், ராசிபுரம் தங்கராஜ், சுந்தர், நாமக் கல் முருகேசன், சுப்பிரமணி, சண்முகசுந்தரம், குணபாலன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.