districts

img

மாநில அளவிலான மல்யுத்த போட்டி

சேலம், ஏப்.10- தமிழ்நாடு மாநில அளவிலான மல்யுத்த  போட்டி ஞாயிறன்று சேலத்தில் நடை பெற்றது. சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான  மல்யுத்த போட்டி தொடர் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்டிஐ பிரிவின் ஒருங் கிணைப்பாளர் விஜய் லட்சுமணன் துவக்கி வைத்தார். இப்போட்டியில் 20க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் 246க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளிலும் மற்றும் 50, 57, 65, 74, 86, 97 கிலோ எடை என மொத் தம் பத்து பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. போட்டி முடிவில் புள்ளி விவ ரங்கள் அடிப்படையில் வெற்றி பெற்ற  வீரர்கள் உடனடியாக அறிவிக்கப்பட்டனர். முடிவில் சிறந்த மல்யுத்த வீரர் வீராங் கனைகள் தேர்வு செய்யப்பட்டு தென்னிந் தியா அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு தொகையும், எலக்ட்ரானிக் ஸ்கூட்ட ரும் வழங்கப்பட்டது.