பொங்கல் பண்டிக்கை நெருங்குவதையொட்டி செங்கரும்பு அறுவடை பணி மும்முரம் அடைந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பூலாம்பட்டி நீர்த்தேக்கம் உள்ளது இந்த பகுதியில் காவிரி நீர் தேக்கி வைக்கப்படுவதால் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி எடப்பாடி பகுதியில் பரவலாக செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாரான செங்கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக செங்கரும்பு கொள்முதல் செய்வதும் மற்றும் விவசாயிகள் வியாபாரத்திற்கு விற்பனை செய்தும் வருகின்றனர்.
இந்த ஆண்டு கரும்பின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பயிரிட்டதற்கான முழு தொகையில் ஒரு பாதி தொகை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை இதன் காரணமாக இந்த ஆண்டு கரும்பு விவசாயத்தில் பெருமளவில் நட்டம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 400 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு இந்த ஆண்டு 200 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். எனவே, தமிழக அரசு, கரும்பு விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.