districts

மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சேலம், ஜூன் 7- அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், சேலம் - நாமக் கல் தேசிய நெடுஞ்சாலையில் மேற் கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணி களை விரைவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ் சாலை வழியாக ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல் வேலி, கன்னியாகுமரி வரை நாள்தோ றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத் தில் சேலம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து பனமரத்துப்பட்டி பிரிவு சாலை வரை அணுகு சாலை உள்ளது. ஆனால், அணுகு சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் இருந்து சில இருசக்கர வாகன ஓட்டிகள் பிர தான சாலைக்கு வருகின்றனர். இத னால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவது டன், சில நேரங்களில் எதிர்திசையில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத் தில் சிக்குகின்றனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தாசநாயக்கன்பட்டியில் ரூ.21 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க நடவ டிக்கை மேற்கொண்டது. கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்கு  மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி செல்லும் வாகனங்கள், அதேபோல நாமக்கல்லில் இருந்து சேலம் வரும் வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது.

அதேபோல, சேலத்தில் அண்மை யில் பெய்த கனமழை காரணமாக, ஜருகுமலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தாசநாயக்கன்பட்டி சாலை யில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இத னால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு மேம்பாலப் பணி களை விரைந்து முடித்து பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிபிஐ மறியல்

இந்நிலையில், மேம்பாலப் பணி களை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாச நாயக்கன்பட்டி - நிலவாரப்பட்டி பைபாஸ் பகுதியில், மாவட்டச் செயலாளர் அ. மோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிபிஐ கட்சியின் முன் னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.