சேலம், ஏப்.10- கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப் பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் எடப்பாடி கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர் களுக்கு சாலைப் பணியாளர் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு, தொழில்நுட்பக் கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்திலும், பணிக்காலத்தி லும் உயிர்நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத் தினர் எடப்பாடி கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் கலைவாணன் அந்தோணி தலைமை வகித்தார். இதில், கோட்ட செயலாளர் மூ.தங்கராசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பச்சமுத்து, கோட்டை, துணைத்தலைவர் கள் செல்வம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.