சேலம், ஜூன் 12- குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து, ஒரு மாதம் கடந்தும் தற்போது வரை தண்ணீர் திறக்கப்படா தது வருத்தமளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை யிலிருந்து திறக்கப்படுவது வழக்கம். ஜூன் 12 முதல் ஜன.28 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகத்திற் கும் சேர்த்து சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணை திறப்பின் மூலம் நிவர்த்தி செய்து வந்தனர். இந்நிலை யில், பருவமழை தவறியது மற்றும் கர் நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமை யாக கிடைக்காததால் மேட்டூர் அணைக் கான நீர்வரத்து குறைந்தது. மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்றால், நீர்மட்டம் குறைந்தது 90 அடியை எட்டி யிருக்க வேண்டும் என்பதுடன், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நன் றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். ஆனால், தற்போது அணையின் நீர்மட்டம் 43.71 அடியாக குறைந்துள்ள நிலை மற்றும் அணைக்கு நீர்வரத்து 500 கனஅடிக்கும் கீழே இருப்பதால் தண்ணீர் திறக்கப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகால வரலாற்றில் ஜூன் மாதம் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல், கடந்த 2009 முதல் 2019 வரை 9 ஆண்டுகள் வரை நீடித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டு கள் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலை யில், இந்தாண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகு படி பாதிக்கப்படும் என, பாசனப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித் துள்ளனர்.