districts

img

குடிநீர் பற்றாக்குறை - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பக்குட்டை ஊராட்சி காளிங்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் குடிநீர் கேட்டு புதன்கிழமையன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை  அடுத்த தப்பக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட காளிங்கனூர் , கருப்புக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன .

இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக முறையாக  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கோடை காலத்தில் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி  பெண்கள் காலி குடத்துடன் காளிங்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில்  மறியலில் ஈடுபட்டனர் .

அப்போது அவ்வழியே இடைப்பாடியில் இருந்து இளம்பிள்ளைக்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது . 

இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் மற்றும்  மகுடஞ்சாவடி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையாளர் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் .
இதனையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது காணப்பட்டது