districts

img

சங்ககிரி அருகே கட்டடத் தொழிலாளி விபத்தில் பலி - போலீசார் விசாரணை

சங்ககிரி அருகேயுள்ள மஞ்சக்கல்பட்டி  பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள மஞ்கல்பட்டி பகுதியில் எடப்பாடி, போடிநாயக்கன்பட்டி, வாளன்வளவு பகுதியைச் சேர்ந்தவர்  பழனிசாமி (50) கட்டிட வேலை செய்து வந்தார். இவரும் எடப்பாடி, குரும்பபட்டி தனமூர்த்தியூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித்தொழிலாளி  முருகன் மனைவி மேகலா ஆகிய இருவரும் சங்ககிரி அருகே உள்ள ரெயின்போ காலனி பகுதியில் 8.ம் தேதி செவ்வாயன்று இரவு கட்டிட வேலை செய்து விட்டு  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்  மஞ்சக்கல்பட்டி  பகுதியில் செல்லும் போது எதிர்பாரத விதமாக எதிரே வந்த லாரி மோதியதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்

பலத்த  காயமடைந்த மேகலாவை மேல்சிசிக்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.