districts

 வேலூர் ரயில் மோதி வாலிபர் பலி

வேலூர், ஜூன் 2-

     வேலூர், தொரப்பாடி, ஜீவா நகரை சேர்ந்தவர் வைரமுடி. இவரது மகன் பாபு. இவர் வியாழக்கிழமை இரவு கணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் பாபு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி ரயில்வே காவல் துறையினர் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.