கிருஷ்ணகிரி, பிப்.9- அரசுப் பள்ளி மாணவியை பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு உச்சபட்சமாக தண்டனை வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வலியுறுத்தியுள்ளது. தளி ஒன்றியம் குருபரப்பள்ளி கிராமத்தில் வாலிபர் சங்கத்தின் அரசியல் பயிற்சி முகாம் மற்றும் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இளம் தலைவர் புரு ஷோத்தம ரெட்டி தலைமை தாங்கி னார். திவாகர் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். சுதந்திரப் போராட்டத்தில் இளைஞனின் பங்கு குறித்து மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் பேசினார். மாவட்டச் செயலாளர் இளவரசன், அனுமப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தளி ஒன்றியத்தில் வாலிபர் சங்கத்திற்கு தலைவர் அம்ரிஷ், செயலாளர் நஞ்சா ரெட்டி,பொருளாளர் திவாகர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போச்சம்பள்ளி அருகில் அரசு நடுநிலைப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்களுக்கு உச்சபட்ச கடும் தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்பகுதி பெற்றோர்க ளின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக பள்ளி யில் அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 4 ஆசிரியர்கள் இடமாற்றம் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து கல்வி அதிகாரிகள் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதனி டையே, 3 வது நாளாக அரசு பள்ளிகள் இணை இயக்குநர் சாந்தி,மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, அந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளதால், மற்ற 4 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிப்.10 முதல் வேறு பள்ளிகளில் இருந்து 7 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.