விழுப்புரம், பிப்.18- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நக ராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணி கள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி யது. இந்த பணிகளுக்காக சிறிய சாலை முதல் பிரதான சாலைகள் நேரு வீதி, ராஜாஜி வீதி, குழந்தைவேலு தெரு, மருத்துவமனை சாலை என்று பல பகுதி களிலும் சாலைகளை உடைத்து பள்ளங்கள் தோண்டப்பட்டன. அந்த பள்ளங்களை வெறும் மண்ணை மட்டும் கொண்டு மூடியுள்ளது. இதனால் மண் புழுதி பறக்கிறது. சரிவர மூட வில்லை. இதனால், வாகன ஓட்டிகள் மட்டு மின்றி பாதசாரிகள் கூட செல்ல முடிய வில்லை. எனவே, பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் திண்டிவனம் நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் புதுவை, மரக்காணம், விழுப்புரம், மயிலம், ஒலக்கூர், ஆவ ணிப்பூர் மார்க்கங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டிவனத்தின் மையப்பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், வங்கிகள், காய்கறி கடைகளுக்குச் செல்ல திண்டிவனத்தின் மேம்பாலத்தை தான் பயன்படுத்த வேண்டி யுள்ளது. திண்டிவனத்தில் மேம்பாலம் பழுது பார்க்கும் பணி பல மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது திண்டிவனம் நகரப் பகுதிக்கு செல்லும் வழியில் பணி கள் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடை பெறும் இந்த நேரத்தில் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதுவை, மரக்காணம், விழுப்புரம், மயிலம், ஒலக்கூர், ஆவணிப்பூர் மார்க்கங்க ளில் இருந்து வரக்கூடிய மாணவர்கள், வியாபாரிகள், பயணிகள், பொதுமக்கள், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் திண்டிவனத்தில் முக்கிய நகர பகுதிக்கு வரவேண்டுமெனில் மேம்பாலத்தில் பயன்படுத்தி வருகின்றனர். வயதானவர்கள் சிரமப்படுவதால் நகரும் மின் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.