districts

மாற்றுத்திறனாளிகளை தொழில்முனைவராக்கும் சமூகப்பணியில் இளம்பெண்

சென்னை, ஜூன் 3-

    விளிம்புநிலை மக்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற அவர்களை தொழில்முனைவராக்கும் சமூகப்பணியில் இளம்பெண் விஜயலட்சுமி ஈடுபட்டுள்ளார்.  

    சென்னை மந்தவெளியை சேர்ந்த முனுசாமி-அஞ்சம்மா தம்பதியின் மகளான விஜயலட்சுமி கடந்த 7ஆண்டுகாலமாக சமூகசேவையில் ஈடுபட்டு ஏராளமான மக்களுக்கு உதவி செய்துள்ளார்.  சென்னையில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகள்  சுய தொழில் செய்து முன்னேற அவர்களுக்கு மருதாணி டிசைன், அழகுகலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்து தருகிறார்.  

    ரத்ததான முகாம், கவுன்சிலிங் உள்ளிட்டவற்றிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.  பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட வர்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக 20 க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் 150 க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் பயிற்சி அளித்துள்ளார்.

   இதனால்  அவர்கள் வாழ்க்கையில் ஒருபடி முன்னேறி செல்ல முடிகிறது.  விஜயலட்சுமியின் தன்னார்வத் தொண்டால் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர். அவ ரது சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள்  நற்சான்றிதழ்களை வழங்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.