districts

சென்னை முக்கிய செய்திகள்

இளம்பெண் சங்கிலியால் கட்டி  எரித்து கொலை: திருநம்பி கைது

சென்னை, டிச. 24- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி அடுத்த பொன்மார் பகுதியில் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.   தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்த்த போது பெண்ணின் கை, கால்களை சங்கிலி யால் கட்டி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடல் அருகே கிடந்த செல்போனை எடுத்த காவல் துறையினர் அதில் இருந்த ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்க, கொலையான இளம்பெண் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த 26 வயதான நந்தினி என்பதும், மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.  அதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், நந்தினியை அவரது நெருங்கிய நண்பர் வெற்றிமாறன் கொலை செய்தது தெரிய வந்ததையடுத்து வெற்றிமாறன் என்ற திருநம்பியை கைது செய்தனர். தொடர் விசாரணையில் ஒரு தலை காதல் காரணமாக நந்தினியை வெற்றி மாறன் கொலை செய்ததும், வெற்றிமாறன் பெண்ணாக இருந்தபோது சிறுவயது முதலே நந்தினியுடன்  தோழியாக பழகியுள்ளார்.  சனிக்கிழமை நந்தினியின் பிறந்தநாள் என்பதால் வெற்றிமாறனும், நந்தினியும் காலையில் கோயிலுக்கும், பிற்பகலில் ஆதரவற்றோர் காப்பகத்துக்கும் சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இன்ப அதிர்ச்சி அளிப்ப தாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றுள்ளார். வெற்றிமாறன் மீதிருந்த நம்பிக்கையால் நந்தினியும் கேள்வி கேட்காமல் சென்று இருக்கிறார். அங்கு நந்தினியை துணியால் கண்ணை கட்டி, பின்னர் கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று நந்தினி கேட்க உனக்கு சர்ப்ரைஸ் என்று சொல்லி நந்தினியை நம்ப வைத்துள்ளார். அதன்பின் நந்தினியின் கை, கால், கழுத்து என பல இடங்களில் பிளேடால் அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் நந்தினி கதறியதும் வாயில் துணியை வைத்து அடைத்து, அவரது தலையில் கல்லால் ஓங்கி அடிக்க அவர் நிலை குலைந்து கீழே சரிந்து இருக்கிறார். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து நந்தினி மீது ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநம்பியாக மாறிய வெற்றிமாறன் நந்தினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  ஆனால் நந்தினி வேறொரு நபரை காதலிப்பதை அறிந்து பிறந்தநாள் அன்றே வெற்றிமாறன் தனது பள்ளி பருவ தோழியை இரக்கமின்றி கொலை செய்திருக்கிறார்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 

சென்னை, டிச. 24- சில நோய்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பார்த்தால்தான் குணமாகும் என்ற சூழலில் அதற்கான போதிய பண வசதி இல்லாத காரணத்தால் இந்திய நோயாளிகள் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருவதை கருத்தில் கொண்டு அவர்கள் அங்கு சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வகையில் புதிய “ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல்” என்னும் மருத்து காப்பீட்டு திட்டத்தை ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். உலகளாவிய வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட தனிநபர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதிசெய்வதோடு,அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளையும் இந்த காப்பீடு வழங்குகிறது என நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க  விரும்பும் இந்திய மாணவர்கள்

சென்னை,டிச.24- வெளிநாட்டில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் விருப்பங்கள் மற்றும் சவால்கள் குறித்து அறிந்து கொள்ள ஆக்ஸ்போர்டு இன்டர்நேஷனல் நிறுவனம் உலகம் முழுவதும்  ஆய்வு ஒன்றை நடத்தியது. வெளிநாட்டில் படிப்பதால் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைப்பதாக 50 விழுக்காடு மாணவர்களும், கலாச்சார அனுபவம் கிடைப்பதாக 42 விழுக்காடும், மொழித்திறன் மேம்படுவதாக 41 விழுக்காடும் அதில் கருத்து  தெரி வித்துள்ளனர்.  உலகளாவிய கலாச்சாரம், மொழி மீதான ஆர்வத்திற்காக வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க விரும்புவதாக இந்திய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதில் 50 விழுக்காடு வெளிநாட்டில் கல்வி கற்றால் சிறந்த தொழில் வாய்ப்புகள் உள்ளதாக  கூறியுள்ளனர். இது தவிர, இந்திய மாணவர்களில் 50 விழுக்காட்டினர்  ‘வாழ்க்கைச் செலவு’ என்றும், 35% இந்திய மாணவர்கள் ‘உயர் கல்விக் கட்டணம்’ அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மோடி அரசின் ஜனநாயக படுகொலைக்கு வைகோ கண்டனம் 

சென்னை, டிச. 24- நாடாளுமன்றத்தில் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, மோடி அரசின் ஜனநாயக படுகொலை என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றஞ்சாட்டினார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தி யாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “2015-ல் மழை வெள்ளம் தாக்கியபோது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளன. இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை வெள்ளம் தாக்கியதில் ஏராளமான குடும்பங்கள் எல்லா வற்றையும் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் நிற்கின்றன. இதனை சரி செய்வதற்காக மாநில அரசுக்குள்ள சக்திகளை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். ஒன்றிய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை. ஆனால் பிஜேபி ஆளுகின்ற மாநிலங்க ளில் அவர்களின் தேவைக்கு அதிகமாகவே நிதியை தருகிறார்கள். ஒரு கண்ணிலே வெண்ணையும் பிஜேபி அல்லாத மாநிலங்களில் சுண்ணாம்பை கண்ணில் வைப்பது போல பத்தில் ஒரு பங்கை தரு கிறார்கள். பிரதமரை போகிற போக்கில் பார்த்து செல்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் நம்முடைய முதலமைச்சரை சொல்லி இருக்கிறார்? போகிற போக்கில் பார்க்க பிரதமர் என்ன வழிப்போக்கரா? மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் போது நிவாரணத்திற்காக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக முதல்வரின் நேரத்தை மாற்றி இரவு சந்திக்கலாம் என்று சொன்னது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையைa காட்டுகிறது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார். தமிழ்நாடு அரசு மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. மின்சாரம் பழுதுபட்ட பல இடங்களில் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு என்பதால் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு மக்களுக்கு தேவையான உதவி களை செய்து வருகிறது. 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டது இந்திய நாடாளுமன்ற வர லாற்றிலேயே இதுதான் முதல் முறை ஒன்றிய மோடி அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது என்றார்.

ஓசூரில் கடும் பனிப்பொழிவு:  வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர், டிச. 24- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. சூளகிரி, பாகலூர், ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் பொழுது விடிந்த பிறகும் கடுமையான பனிமூட்டம் நிலவி யது. குறிப்பாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பெங்களூர் தர்மபுரி நெடுஞ்சாலை ஆகிய பிரதான நெடுஞ்சாலைகளில் வெண்போர்வை போர்த்தி யது போல கடுமையான மூடுபனி பொழிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்ட வாறு வாகனங்களை இயக்கினர். விவசாயிகளும் விளை பயிர்களை குறிப்பாக மலர்கள், காய்கறிகளை சந்தை களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  மக்களுடன் முதல்வர் திட்டம் 

ராணிப்பேட்டை, டிச. 24 -  அன்றாடம் பொதுமக்கள் அணுகும் முக்கிய அரசு துறை களின் சேவைகளை மக்கள் வசிப்பிடங்களின் அருகி லேயே கிடைத்திட வசதியாக, தமிழ்நாடு அரசு மக்களு டன் முதல்வர் என்ற திட்டத்தை ராணிப்பேட்டை மாவட் டத்தில் டிசம்பர் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும்  ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகா மில்  ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் 25 சத வீதம் முதல் 35 சதவீதம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று தொழில் தொடங்கி பயன் பெற உரிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படு கிறது.   மேலும் முகாம் நடைபெறும் இடத்திலேயே தொழில் துவங்குவதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி யாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க விரும்புவோர், தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய உள்ளோர். பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் அதிகளவு கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடலூரில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் 

ராணிப்பேட்டை, டிச. 24 -  கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டுஅரங்கில், ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை  பல்வேறு பணிகளுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்துகொள்ளலாம் அல்லது தொலைபேசிஎண் 04172 - 291400 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.  ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலை வாய்ப்பற்ற இளை ஞர்கள் அதிக அளவில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான முகாமில் பங்குபெற்று ராணுவ பணிகளில் பணிவாய்ப்பு பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.