சென்னை, மே 6 - தமிழ்நாடு சட்டப்பேரவை யில் கலை பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “ சென்னை தீவுத்திடலில் சென்னைக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணி களுக்கு பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள், பொருட் காட்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை நடத்திடும் வகையில் நுழைவு வாயில், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பிட வசதிகள், மின் விளக்குகள், மரம் நடுதல், சுற்றுச்சுவர் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இந்தியாவின் முதல் மாநக ராட்சியாகவும் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் கருதப் படும் சென்னையில் மெரீனா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், புனித ஜார்ஜ் கோட்டை, அரசு அருங்காட்சியகம் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கும், சுற்றுலா தலங்களுக்கு எளிதில் செல்லும் வகையிலும் சென்னையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்னும் திட்டம் பொது - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றார்.