districts

img

வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

புதுச்சேரி, ஏப். 16- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில்  இந்தியா கூட்டணியின்  வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதர வாக  எழுத்தாளர்கள் கலை ஞர்கள்  கூட்டறிக்கை வெளி யிட்டனர். புதுச்சேரி கலை இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள், கலைஞர் கள், சமூக அறிவு ஜீவிகள் சார்பில் பேராசிரியர் இளங்கோ, லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் செய்தியாளர்கள் முன்னி லையில்   கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் விவரம் வரு மாறு, ஒன்றிய பாஜக அரசு தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் மீது விமர்சனமும், மாற்று கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் சிறை வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் வங்கி கணக்கை முடக்குவது, அரசின் பல அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்து ஜனநாயகத்தை பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடிக்கு நிதி முறைகேடு நடந்துள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகம் ஊழல்வாதிகள், சங்பரிவாரங்களின் கூடாரா மாக மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தியாவிலேயே ரேசன் கடைகள் இல்லாத மாநில மாக புதுச்சேரியை மாற்றி விட்டனர். புதுச்சேரி மதுச்சேரியாகி கொண்டி ருக்கிறது. மின்துறையை தனியார் மயமாக்க துடிக்கிறார்கள். சமுக அமைதிக்கு மதவாத சக்திகளால் அச்சுறுத்தல் கள் வருகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். இந்தியாவில் மதச்சார் பின்மையும், ஜன நாயகத்தையும், கருத்துரி மையையும் பன்மைத்துவ கலாசாரத்தையும், தனித்து வத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப் படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள் ளோம். மேலும், புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற வும், மறுக்கப்பட்ட பல உரி மைகள் மீண்டும் கிடைத்திட வும், புதுச்சேரி வாக்காளர் கள் இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.  செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், புதுச்சேரி தலைவர் மணி.கலியமூர்த்தி, பாவலர் சீனு மோகன்தாஸ், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில நிர்வாகி பால கங்கா தரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சரவணன், கவிஞர் சிவ இளங்கோ, புதுச்சேரி லெனின் பாரதி, செல்வம் அருணாச்சலம், உள்ளிட்ட எழுத்தாளர்கள் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.