சென்னை, பிப்.21- உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழி களின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் தலைப்பில் பன்னாட்டுச் சிறப்புக் கருத்த ரங்கம் பிப். 20 அன்று நடை பெற்றது. அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம், 7 கண்டங்கள் 27 நாடுகளி லிருந்து 55க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் இதில் பங் கேற்று இணைய வழியாக உரையாற்றினர். இவ்விழாவினை தேசிய கல்வி அறக்கட்டளை, கல்லி டைக்குறிச்சி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி ஆகியவை இணைந்து நடத்தின. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.பஞ்ச நாதம், தலைமை வகித்தார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கக இயக்குநர் கோ.விசயராகவன் தமிழ்மொழி மற்றும் தமிழ்ச் சொல்லின் சிறப்பினை எடுத்துரைத்தார். திரைப்பட இயக்குநர் வி.சேகர் பேசும்போது, அவர வர் மொழியை அவரவர் பேசட்டும். நம் தமிழ் மொழியை நாம் நேசிக்க வேண்டும். கலப்படம் இல்லாத தமிழை பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இவ்விழாவில் ஆசிரி யர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வ லர்கள், மாணவர்கள், ஆய்வு மாணவர்கள் என இணைய வழியாக 500க்கும் மேற்பட் டோரும் யூடியூப், முகநூல் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பங்கேற்ற னர்.