சென்னை, டிச. 18- ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் டிஆர்இயூ வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் “தொழி லாளர்களின் வெற்றி விழா” பொதுக்கூட்டம் புதனன்று (டிச. 18) நடைபெற்றது. சங்கத்தை வெற்றிபெற செய்த அனைத்து தொழி லாளர்களுக்கும் பொதுச் செயலாளர் வி.அரிலால், தலைவர் ஜி.சுகுமாரன், செயல் தலைவர் அ.ஜானகி ராமன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ரயில்வேயில் செயல் படும் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் 2024 டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் 30 சதம் வாக்கு கள் பெறும் சங்கத்திற்கு அங்கீகரம் என்ற விதியின் அடிப்படையில், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு), சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன், சதர்ன் ரயில்வே எம்ப்ளாயிஸ் சங் உள்ளிட்ட 5 சங்கங்கள் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிஐடியு-வுடன் இணைக்கப்பட்ட சங்க மான தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் தலைமையில் அமைக்கப் பட்ட கூட்டணி 26, 151 வாக்குகளும், எஸ்ஆர் எம்யூ 26,258 வாக்குகளும் பெற்றன. தொழிலாளர்களின் வெற்றி விழா இதையடுத்து அந்த வெற்றியை “தொழி லாளர்களின் வெற்றி விழா”வாகவும், தொழி லாளர்களின் பாராட்டு கூட்டமும் டிஆர்இயூ சார்பில் சென்னையில் புதனன்று நடைபெற்றது. முன்னதாக சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்திலிருந்து பேண்டு வாத்தியங்களுடன் சிலம்பம், தாரை தப்பட்டை ஆட்டம், பாட்டம் என தொழி லாளர்கள் 2,000 பேர் ஊர்வல மாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவ லகம் வரை சென்றனர். பின்னர் அங்கு வெற்றி விழா கூட்டம் செயல் தலை வர் அ.ஜானகிராமன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு தலைவர்கள், தோழமை சங்க தலைவர்கள் பங்கேற்பு இதில் சிஐடியு அகில இந்திய துனை தலை வர் ஏ.கே.பத்மநாபன்,
சங்கத்தின் கவுரவத் தலை வர் டி.கே.ரங்கராஜன், சங்கத்தின் தலை வரும், சிஐடியு பொதுச்செய லாளருமான ஜி.சுகு மாரன், பொதுச் செய லாளர் வி.அரிலால், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், ஆர்எல்எல்எப் தென் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர் அசோசியேஷன் செயலாளர் விஜயராஜன், தலைவர் ஜான் வின்சென்ட், அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோஷியேஷன் அகில இந்திய இணைச் செயலாளர் பார்த்த சாரதி, சதர்ன் ரயில்வே இன்ஜினியர்ஸ் அசோசி யேஷன் தென் மண்டல பொருளாளர் ஜோதிராம், அகில இந்திய ரயில்வே அக்கவுன்ட்ஸ் ஊழியர் அசோசியேஷன் அகில இந்திய பொதுச்செயலாளர் ரெஜிஜார்ஜ், அகில இந்திய கார்டுஸ் கவுன்சில், ரயில்வே லேபர் லிபரேஷன் பிரண்ட் பொதுச்செயலாளர் குமார வேல், பாரதிய ரயில்வே எம்ப்ளாயீஸ் சங் தலைவர் வெங்கடகிருஷ்ணன், சதர்ன் ரயில்வே பர்சன் வித் டிஸ்எபிலிட்டிஸ் பொதுச்செயலாளர் மாரி முத்து, ஆர்எல்எல்எப் டிவிஷன் செயலாளர் ஆறு முக சரவண பெருமாள், வரு மானவரித் துறை அகில இந்திய சம்மேளனத் தலை வர் வெங்கடேசன், ஐசி எப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செய லாளர் ஜோஷி ஆகியோர் பேசினர். முன்னதாக உதவி பொதுச் செயலாளர் அருண்குமார் செழியன் வரவேற்றார். துணைத் தலைவர் பேபி ஷகிலா நன்றி கூறினார்.