districts

img

ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

ஒன்றிய பாஜக மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கைவிடக் கோரி  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் இ.துரைசாமி தலைமையில்  காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார், மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.மதுசூதனன், ஜி.வசந்தா ஆகியோர் பேசினர். திருப்பெரும்புதூர், அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜெனிட்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் பி.ரமேஷ், எஸ்.கௌரிசங்கர், ஆர்.சுகுந்தன், டி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.