districts

img

மீண்டும் வேலை கேட்டு தொழிலாளர்கள் தொடர் பட்டினிப் போராட்டம்

காஞ்சிபுரம், ஜன.6- காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப் பெரும்புதூர் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த டாங்சன், ஃபாக்ஸ்கான், கிஷ்கிந்தா ஆலைகள் மூடலால் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் தொடங்கிய இப்போராட்டத்தை மாநிலச் செயலாளர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், மாவட்டப்  பொருளாளர் ஜி வசந்தா மாவட்டக் குழு உறுப்பினர் ஜெனிட்டன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். டாங்சன் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் சட்டவிரோதமாக மூடப்பட்டதால் கடந்த  4  ஆண்டுகளாக  113 தொழிலாளர் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.  நிர்வாக இயக்கு நர் மற்றும் மேலாளர்களுக்கு டாங்சன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் வேலை வழங்கியதைப் போல் தொழிலா ளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். பாக்ஸ்கான் நிர்வாகத்தில் 2015இல் உற்பத்தியை நிறுத்திய போது வேலை இழந்த 1300 தொழிலாளருக்கு மீண்டும்  ஒப்பந்தப்படி வேலை வழங்க வேண்டும்.  கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவை   திறந்து வேலையில்லாத தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு டாங்சன், ஃபாக்ஸ்கான், கிஷ்கிந்தா ஆகிய நிறுவ னங்களில் பணிபுரிந்து வேலை இழந்த தொழி லாளர்கள் தினமும் 15பேர் இப்போராட்டத் தில் கலந்து கொள்கிறார்கள். கோரிக்கை கள்  ஏற்கப்படும் வரை  போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் பி.பிரபு (டாங்சன்), கே.ரஜினி (ஃபாக்ஸ்கான்), கே.ரவிச் சந்திரன், ஜெ. விக்டர் ஜான் (கிஷ்கிந்தா) ஆகியோர்  தெரிவித்தனர்.