districts

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

பொன்னேரி,மார்ச்.9- பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலை யில் இருந்து ஆந்திர மாநி லம் சித்தூர் வரை 136 கி.மீட்டர் 6 வழி சாலை அமைக்கும் பணிநடை பெற்று வருகிறது.  இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா தம்பு நாயக்கன்பட்டி காளி யம்மன்கோவில் தெருவை சேர்ந்த  முத்து (59) என்ற ஒப்பந்த தொழிலாளி மற்றும் 6 பேர் கொண்ட அதிகாரி கள் குழுவினர் ஊத்துக் கோட்டை அருகே பென்ன லூர்பேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் இரும்பு பேரல் களைகொண்டு படகு போல் தயார் செய்து மண் பரி சோதனை செய்து கொண்டி ருந்தனர். அப்போது முத்து திடீரென தவறி தண்ணீரில் மூழ்கினார். அவரை உடன் சென்ற தொழிலா ளர்கள் மீட்கமுயன்றும் முடிய வில்லை. இதுபற்றி பென்ன லூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் தேர்வாய் கண்டிகையில் உள்ள சிப்காட் தீயணைப் புத்துறை வீரர்களுடன் ஏரிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கி பலியான முத்துவின் உடலை மீட்டனர். 

;