விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பணியை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வியாழனன்று (டிச. 8) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஓம் சிவ சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.