எழும்பூர் எலக்ட்ரிக்கல் பவர் அலுவலகத்தில் பெண்கள் ஓய்வறையில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய எஸ்.ஆர்.எம்.யூ. செயலாளர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூரில் டிஆர்இயூ சென்னை டிவிஷன் துணைத் தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் மணிமேகலை, தனலட்சுமி, டிஆர்இயூ துணைப் பொதுச்செயலாளர் பேபி ஷகிலா, சென்னை டிவிஷன் தலைவர் ராமமூர்த்தி, இணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், எக்ஸ்ட்ரா டிவிஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர்.