சென்னை, மார்ச் 18- சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்களில் 4 மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 200 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் ஐஐடி வளாகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றுக் கணக்கான மான்களின் வசிப்பிடமாக சென்னை ஐஐடி வளாகம் இருந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மான் ஒன்று உயிரிழந்துள்ளது. மான் உயிரிழந்ததை தொடர்ந்து இறந்த மானை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழப்பதாக முடிவுகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த இரு தினங்களில் நான்கு மான்கள் பரிதாபமாக உயிரி ழந்தன. இதனால், ஆந்த்ரா க்ஸ் நோய் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை ஐஐடி, இறந்த மான்களை கையாண்ட பணியாளர்க ளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும் நாய், மான் உள்ளிட்ட விலங்குகள் ஐஐடி வளாகத்தில் இருந்து நகரின் பிற பகுதிக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க இருப்ப தாக சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.