districts

img

சுவை கூட்டும் பன்மைத்துவத்தின் ருசியுடன் சிபிஎம் அகில இந்திய மாநாட்டு உணவுக்கூடம்

இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்): ஏப்.7- ஹைதராபாத் முறுக்கு, தர்க்காரி பிரியாணி, சம்பா அரிசி சோறு, அன்னாசிப்பழ பாயாசம்... என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டின் உணவுக் கூடம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்றுள்ள பிரதிநிதிகளுக்கு வேற்றுமையில் ஒற்றுமையின் ருசியை உணர்த்துகிறது. மாநாட்டு உணவகம் கேரளக் கஞ்சி முதல் இந்திய உணவுகள் வரை அனைத்தையும் வழங்குகிறது. வட இந்தியர்கள் தேங்காய் எண்ணெய்யை உணவில் பயன்படுத்த  விரும்புவதில்லை. அவரவர் ரசனைக்கேற்ப உணவு தயாரிக்கப்படுகிறது. காலை உணவு 7 மணிக்கு வழங்கப்படுகிறது. வேகவைத்த பழங்கள் மற்றும் முட்டை, கேசரி, ஓட்ஸ், பூரி, சப்பாத்தி, ரொட்டி, நாண், பருப்பு என அனைத்தும் மெனுவில் உள்ளன. ஒரு மணிக்கு மதிய உணவு. அதில் கூட்டுகறி, அவியல், புளிக்கறி, சாம்பார், பருப்புகறி, சோறு, கோழி, இறால் மற்றும்  மீன் உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சோறுடன் சப்பாத்தி, பரோட்டா இருக்கும். இரவு பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் பாசாலா, சிக்கன், மற்றும் கறி வகைகள் உள்ளன. கோழிக்கோடு சுவையில் முன்னணியில் இருக்கும் பாரகன் ஓட்டல் உரிமையாளர் சுமேஷ் கோவிந்த், உணவு தயாரிக்கும் பணிக்கு முன்னிலை வகிக்கிறார். சமையலறையில் உணவு தயாரிக்க ஐம்பது பேர் கொண்ட குழுவும், உணவு பரிமாற 30 பேர் கொண்ட குழுவும் உள்ளன.