districts

img

தங்கசாலை பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமா?

சென்னை, மே 11- தங்கசாலை பூங்காவில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை ராயபுரம் மண்டலம் 5க்கு உட்பட்ட 53ஆவது வட்டத்தில் 9018 சதுர மீட்டர் பரப்பளவில் தங்கசாலை பூங்கா உள் ளது. கடந்த 8 மாதங்களுக்கு  முன் பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது தினசரி ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள்  இந்த பூங்காவை பயன் படுத்தி வருகின்றனர். ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. கடுமையான வெப்பத்தின் தாக்கம் நிலவும் நிலையில் குடிக்க தண்ணீர் இல்லாத தால் மக்கள் அவதிப்படுவ தோடு, காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும்  குப்பைகளை போடுவதற்கு  குப்பைத் தொட்டிகள் இல்லை. சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவில்லை. இதனால் பூங்காவிற்குள் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதிக் குழு, வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகளை வலி யுறுத்தி மண்டல அலுவலர் தமிழ்செல்வனிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அவர் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி யளித்துள்ளார். இதில் பகுதிச் செயலா ளர் எஸ்.பவானி, நிர்வாகி கள் டி.வெங்கட், ச.முரு கேசன், எம்.எஸ்.ஜுகைப், அசிமா, முருகம்மாள், ஜெய லட்சுமி, ஆட்டோ சங்க பகுதி தலைவர் ச.குட்டி, வியா பாரிகள் சங்க செயலாளர் எம்.தமிம்சேட், நிர்வாகிகள் சின்னராசு, லட்சுமி, இந்தி ராணி, கதீஜா பானு, வேளாங் கண்ணி, முருகன், சிவ குமார் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.