திருவள்ளூர், ஆக.19- மீஞ்சூரில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா வெள்ளியன்று (ஆக18) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் முன்முயற்சி மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்க ளாக பணி புரியும் உள்ளாட்சி தொழிலாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தூய்மை பணி யாளர்கள். நல வாரியத்தின் மூலம் 153 தொழிலாளிகளுக்கு நல வாரிய அட்டை வழங்கும் விழா வெள்ளியன்று (ஆக-18), மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தாட்கோ உதவி மேலாளர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தூய்மை பணிவு புரிவோர் நல வாரிய உறுப்பினர் ஹரிஷ், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் (சிஐடியு), மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட தலைவர் பி.கதிர்வேலு, மாவட்ட துணை தலைவர் கே.எஸ்.குமரவேல், என்.தீபா உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்ற னர்.