districts

img

தொடர் மழை: நிரம்பி வரும் நீர் நிலைகள்

சென்னை, நவ. 26- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்க ளாக பெய்து வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் நீர் நிலைகளும் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. சென்னை மக்க ளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், கண்டிகை, சோழவரம் ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. மேலும், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இது குறித்து பொது மக்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கத்தில் மொத்த இருப்பு 85.40 அடியாக உள்ளது. இதில் 83.48 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் உபரி நீர் 163 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீரின் அளவு 198 கனஅடியாக உள்ளது.