ஊத்துக்கோட்டை,ஏப்.27- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் தண்ணீர் 7 ஆயிரத்து 857 மில்லியன் கனஅடி தண்ணீர் (7.8 டி.எம்.சி.) மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஏரியில் 24 விழுக்காடு மட்டுமே தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் தற்போது 251 மி கன அடி மட்டும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து 224 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி. கன அடி. இதில் 1802 மி. கன அடி தண்ணீர் உள்ளது. 63 கன அடி நீர் வெளியேற்றப்படு கிறது. புழல் ஏரியில் 3300 மி. கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2892 மி.கன அடி நீர் உள்ளது. 209 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படு கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி. கன அடி. இதில் 2435 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. குடி நீருக்காக 155 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 477 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.