districts

img

கோயம்பேட்டில் வீணாகும் காய்கறிகள்

சென்னை,மார்ச் 28- கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் சராசரியாக 10 டன் அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திங்களன்று 470 லாரிகளில் வந்து காய்கறி விற்பனைக்கு குவிந்தன. கடந்த மாதம் வரை தினசரி 350 லாரிகளில் மட்டுமே காய்கறி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகரித்து உள்ளது. இதனால் காய்கறி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. ஆனாலும் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு காய்கறி விற்பனை ஆகவில்லை. இதனால் தக்காளி, கத்தரிக்காய், கேரட், அவரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் தினசரி டன் கணக்கில் தேங்கி வீணாகி வருகிறது. சுமார் 10 டன் காய்கறிகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.  தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள் விலை கிலோ ரூ.10-க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

;