districts

சுவரொட்டி, ஸ்டிக்கர் ஒட்டிய   வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, பிப். 17 - சுவரொட்டி, ஸ்டிக்கர் ஒட்டிய வேட்பாளர்களின் செலவு  கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் சேர்க்கப்படும் என்று சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித் துள்ளார். மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்.19 அன்று நடைபெற உள்ளது. இதனையெட்டி வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி வியாழனன்று (பிப்.17) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேலும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்  படை வாகனங்களை துவக்கி வைத்து ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் 90 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800 425 7012 தொடர்பு கொண்டால், பறக்கும் படை குழுக்கள் மூலம்  நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக 69 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருவதை அனு மதிக்க முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, 21  ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போஸ்டர், ஸ்டிக்கர், சுவரெழுத்து உள்ளிட்ட விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்நிலையங்களில் 14 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போஸ்டர் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டும் வேட்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும். பறக்கும் படை இரவு அதிகாலையிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். 1121 வாக்கு சாவடிகளையும் நேரலை வாயிலாக கண்காணிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.