சிதம்பரம், ஆக. 27- காட்டுமன்னார்குடி அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ம.கொளக்குடி கிராமத்தைச் சார்ந்த பிரதாப் என்பவரின் மனைவி பவித்ரா ( 25) என்பவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணித்தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது கட்டு விரியன் பாம்பு கடித்து மயக்கம் அடைந்துள்ளார். உடன வாயில் நுரை தள்ளியவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பணித்தள பொறுப்பாளர் உதவியுடன் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காட்டு மன்னார்குடி வட்டச் செய லாளர் தேன்மொழி, குமராட்சி ஒன்றிய அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் செய லாளர் ஜெயக்குமார், காட்டு மன்னார்குடி வட்டத் தலைவர் பொன்னம்பலம் ஆகியோர் மருத்துவமனை யில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் மற்றும் கும ராட்சி வட்டார வளர்ச்சி அலு வலர் அவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் பூரண குணமாகும் வரை யில் 100 நாள் வேலை திட்டத்தில் முழு சம்பளம் வழங்கிட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சித் தலை வர் தலையிட்டு வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பவித்ரா கணவர் பிரதாப் கூலி தொழிலாளி. இவர்களுக்கு அபிஷேக் (வயது8) ஹர்ஷத் (வயது 9) என்கின்ற குழந்தைகள் உள்ளது.