districts

img

பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைக்கேற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை, மே 3- சென்னை பழைய மகா பலிபுரம் சாலையில் காரப் பாக்கத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு  சாதனங்களை தயாரிக்கும் விசிக்ஸ் ஏடிஜி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சர்வதேச அலுவலக திறப்பு விழா செவ்வாயன்று (மே 3) நடைபெற்றது. இதில் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் புதிய அலுவல கத்தை திறந்து வைத்து பேசுகையில்,  இந்தியா வுக்கான நெதர்லாந்து தூதர் மார்டென் வேன் பெர்க்  தலைமையிலான அந்நாட் டின் குழுவினர் திங்களன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து தமிழகத்தில்  நெதர்லாந்து நாட்டின் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சார்ந்த சேவைகள், விவசா யம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படும் தமிழக அரசின் முயற்சிக்கு நெதர்லாந்து உதவமுடியும். நெதர்லாந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந் தால் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று  முதலமைச்சர் உறுதியளித் துள்ளார். 2030 ஆம் அண்டு ஒரு டிரில்லியன் பொரு ளாதாரம் கொண்ட மாநில மாக தமிழகத்தை மாற்றும்  நோக்கில் மாநில அரசு  செயல்பட்டு வருகிறது.  இதற்கு வெளிநாட்டு முதலீடுகளும் தொழில்நுட் படும் அதிகமாக தேவைப் படுகிறது. தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாகும்.  ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் படித்து முடித்து 4லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள்  பட்டம் பெறுகிறார்கள். இதேபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து முடித்து பட்டதாரிகளாக மாறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் தொழில் துறையினர் எதிர்நோக்கும் திறன் இந்த பட்டதாரிக ளிடம் இல்லை. எனவே அவர்களுக்கு போதிய திறன் மேம்பாட்டு பயிற் சியை தமிழக அரசு அளித்து உள்ளது. புதிதாக வரும் துறைகள் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் திறமையாக செயல்படும் வகையில் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக 2ஆவது ஐசிடி அகாடமியை விரைவில் அமைக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நெதர் லாந்து தூதர் மார்டென் வேன் பெர்க், ஆக்ஸஸ் டெக்னலாஜி குழும தலைமை நிர்வாக அதிகாரி ரெனே ஸ்லெகர்ஸ், விசிக்ஸ்  ஏடிஜி இந்தியா இயக்கு நர் மோகன் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண் டனர்.