districts

img

நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்

நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், முஸ்லிம், கிறித்துவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவடி தொகுதி செயலாளர் ஏ.ஜான் தலைமையில்  ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே புதனன்று (டிச. 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ம.பூபாலன், ஆர்.ராஜன், அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் அம்சாபாய், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், தையல் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, அமைப்புசாரா தலைவர் சடையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் திருவொற்றியூரில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;