districts

img

பால் கொள்முதல் நிலைய கட்டிடம் அமைக்ககோரி தடையை மீறி போராட்டம்

ராணிப்பேட்டை, டிச. 16 – அரசு ஆணைப்படி பால் கொள்முதல் நிலையம் கட்டிடம் அமைக்ககோரி ஆற்காடு ஒன்றியத்தில் விவசாயிகள், பால் உற்பத்தி யாளர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், லாடவரத்தில் உடனடி யாக பால் கொள்முதல் மைய கட்டிடம், கட்டித்தர கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திங்க ளன்று (டிச. 16) ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ச. கிட்டு தலைமை தாங்கினார்.  லாடவரத்தில் பால் கொள்முதல் கட்டிடம் கட்ட ரூ. 20.13 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்தது. ஆவின் பால் நிறு வனத்திற்கு எதிராகவும், தனியார் பால் நிறு வனங்களுக்கு ஆதரவாக கட்டிடம் கட்டாமல் காலதாமதம் செய்யும், அரசு நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் அறி வித்த நிலையில் கட்டுமான பணி களுக்கான பொருட்களை ஞாயிறன்று (டிச. 15) அவசர அவசரமாக கொண்டு வந்துள்ளனர்.  இந்நிலையில் போராட்டத்திற்கு திரண்ட கிராம மக்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி திங்களன்று (டிச. 16) தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் தடையை மீறி போராட்டம் நடை பெற்றது. தொடர்ந்து ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யருக்கு விரைந்து தரமான கட்டுமான பணிகளை முடித்து ஆட்சியர் கைகளா லேயே விரைந்து திறக்க கோரி மனு அளிக்கப்பட்டது.  இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் எம். சிவாஜி, விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, மாவட்ட பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், வி தொச நிர்வாகி  டி. சந்திரன், சிபிஎம் ஆற்காடு வட்ட செயலாளர் ஜி. மதியழகன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். செல்வம், ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர் எஸ். முரளி தாஸ், டி.  விஜயன், எஸ். ஜெயராமன், சேகர், மணி கண்டன் ஆகியோர் முற்றுகைத போராட்டத்தில் பங்கேற்றனர்.