விழுப்புரம், நவ. 23- விழுப்புரம் நகராட்சி சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று(நவ.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் ஆர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினார். புதர்மண்டி கிடக்கும் அரசு பொது மருத்துவமனையை சீர்ப்படுத்த வேண்டும். மருத்துவர், செவிலி யர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தை சீர மைத்து நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.குமார், ஏ.சங்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சிவ ராமன்,எ.நாகராஜன், எஸ்.பிரகாஷ், கே.அம்பிகாபதி, உ.கார்க்கி, கே.வீரமணி, பிளம்பர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முருகன், நகரச் செயலாளர் என்.மேகநாதன் மற்றும் பலர் பேசினர்.