districts

img

திருவொற்றியூர் மண்டலம் 5ஆவது வார்டில் கிராம சபைக் கூட்டம்

சென்னை, அக். 8- பெருநகர சென்னை மாநகராட்சி திரு வொற்றியூர் மண்டலம் 5 ஆவது வார்டு கிராம சபைக் கூட்டம் மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் நடை பெற்றது. நெய்தல் நகரில் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மீண்டும் எப்போது துவங்கப்படும்  என்றும், பராமரிக்கப்படாமல் உள்ள 2 பூங்காக்களை முறையாக  பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாரத் நகர் பகுதியில் தினசரி குப்பை களை அகற்ற நடவடிக்கை வேண்டும். மெட்ரோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட விம்கோ விளையாட்டு திடலை மீட்க வேண்டும். எர்ணாவூர் மேம்பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்து, அதை புதுப்பிக்க வேண்டும்.  குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தற்போது குடியிருப்பவர்கள் பெயரில்  கிரைய பத்திரம் செய்து கொடுக்க வேண்டும். விம்கோ ரயில் நிலையம் முதல் எர்ணாவூர் மேம்பாலம் வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.  விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என  துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதில்  4வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், திமுக அயலக மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கர், வடசென்னை மாவட்ட கிழக்கு இளைஞர் அணி அமைப்பாளர் மதன், மாவட்ட பிரதிநிதி விவேகானந்தன், சின்ன எர்ணாவூர் தலைவர் கோவிந்தசாமி, அம்பேத்கர் நகர் தலைவர் தாஸ், பூம்புகார் நகர் தலைவர் காமராஜ், பாரத் நகர் தலைவர் கிருஷ்ணன், உளவியல் மருத்துவர் அருண் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.