districts

img

ஸ்ரீமதி குறித்து அவதூறு பரப்பும் வீடியோக்களை டெலிட் செய்ய வேண்டும்

எஸ்.பி அலுவலகத்தில் ஸ்ரீமதியின் தாய் புகார்

கடலூர், மே 4-

    ஸ்ரீமதி தற்கொலை என பேசும் வீடியோக் கள் அனைத்தும் நீக்க வேண்டும், அவதூறாக  பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கடலூர் எஸ்.பி.யிடம் ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு அளித்துள்ளார்.

   அந்த மனுவில், கடந்த 12.7.2022 அன்று  என் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம்  கனியாமூர் சக்தி பள்ளியில் மர்மமான முறை யில் இறந்தார். இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, பின் தமிழ்நாடு அரசு மூலம்  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள் ளது. சிபிசிஐடி விசாரணையிலும் சின்ன சேலம் காவல் நிலையத்திலும் ஸ்ரீமதி சந்தேக  மரணம் என்றுதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணை நடைபெறுகிறது.

  இந்த வழக்கில் பள்ளி தரப்பினர் கைது  செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்த னர். அவர்களின் ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் பலாத்காரமும் இல்லை கொலையும் இல்லை என்றும் இது தற்கொலை தான் என்றும் வரம்பு மீறி வார்த்தைகளை பதிவு  செய்தார். அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற நீதிபதி சொன்ன அனைத்து கருத்து களையும் நீக்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி சொன்ன கருத்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என காவல்துறையினருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   பிரபல சமூக ஊடகமான யூ டியூப் தளத்தில் கார்த்திக் பிள்ளை என்பவர் நடத்தி  வரும் தி கே டிவி என்ற சேனலில் தொடர்ச்சி யாக இது தற்கொலை என்றும், என்னையும் என் கணவரையும், என் மகளையும் அவ தூறாக பேசி எங்களது போட்டோக்களையும் பயன்படுத்துகிறார். உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னதையே உச்சநீதிமன்றம் தவறு எனக் கூறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அந்த யூ டியூப் சேனலில் உள்ள எங்கள் குடும்பம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தங்களிடம் புகார் அளித் துள்ளேன். தாங்கள் நடவடிக்கை எடுக்காத தால் மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பி  வருகிறார். எனவே இம்முறை இந்த புகாரின்  அடிப்படையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

   மாதர் சங்க தலைவர்கள் வி.மேரி, மாதவி,  வழக்கறிஞர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.