சிதம்பரம், ஜன. 30- இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது குடும்பத்துடன் 2 ஹெலிகாப்டரில் ஜன.29 அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை வரவேற்ற கோவில் தீட்சிதர்கள், கனக சபையில் மேல் ஏறி சட்டையை கழட்டி விட்டு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தீட்சிதர்கள் அலுவலகத் திற்கு சென்றார். அங்கு முக்கிய பிரமுகர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் கையேட்டில், நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மகிழ்ச்சி அடைவதாக பதிவு செய் தார். அப்போது, தனது பெய ருடன் ‘பாரத்’ குடியரசு துணைத் தலைவர் என எழுதி யுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. காரணம், நாட்டின் இரண்டாவது குடிமகன் என மதிக்கப்படும் குடியரசுத் துணைத் தலைவர், ‘இந்திய நாடு’ என்பதற்கு மாறாக பாரத் என எழுதியதாகும். அதாவது, மிக உயர்ந்த அரசு பதவியில் இருந்தா லும் பாஜக தலைவராக இருப்பேன் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தி யிருக்கிறார்.