சென்னை, மே 24 -
சிஐடியு நடத்து பிரச்சார நடைபயணம் மக்க ளின் சிந்தனையை மாற்றி அமைக்கும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கூறினார்.
நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் 7 மையங்களில் இருந்து திருச்சி நோக்கி நடை பயணம் நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக எம்.தனலட்சுமி தலைமை யிலான சென்னை மண்டலக் குழு மே 22-23 தேதிகளில் மத்திய சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்தக்குழுவில் மாநிலச் செயலாளர்கள் பா. பாலகிருஷ்ணன், சி.திரு வேட்டை, மாவட்டச் செய லாளர்கள் சு.லெனின் சுந்தர் (வடசென்னை), பகத் சிங்தாஸ் (செங்கல்பட்டு), தமிழச்செல்வன் (விழுப்பு ரம்), சுந்தரபாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட் டோர் இடம் பெற்றுள்ள னர்.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆயிரம் விளக்கு பகுதி, டிரஸ்ட்புரத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.சாமுவேல்ராஜ் பேசிய தன் சுருக்கம் வருமாறு: 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியா வில் வேலையின்மை அதி கரித்துள்ளது. வேலை யின்மைக்கு எதிராக போராடிய காலம் மாறி, வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் பொதுத் துறைகளை பாது காக்க போராடிக் கொண்டி ருக்கிறோம்.
எதிர்கால சந்ததிகளின் கவுரமான வாழ்க்கைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிஐடியு நடைபயணத்தை நடத்துகிறது. கோவை, திருப்பூர் போன்ற நகர ஆலை வாயில்களில் எப்போதும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பலகை தொங்கும். ஆட்சியாளர்களின் கொள்கைகளால், அத் தகைய ஆலைகள், ஓட்டல் உள்ளிட்ட வளாகங்களாக மாற்றப்பட்டு வருகிறது. மறு புறம், குறைந்த கூலிக்கு வெளிமாநிலத் தொழி லாளர்கள் வந்து குவிகிறார் கள்.
அதேபோன்று தமிழ் நாட்டு தொழிலாளர்க ளும் வெளி மாநிலங்க ளுக்கு சென்று கொண்டிருக்கி றார்கள். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை முத லாளிகளுக்கு ஆட்சியாளர் கள் தாரை வார்க்கின்றனர். அவர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாயை தள்ளு படியும் செய்து ள்ளார்கள்.
இந்நிலையில், குடியிருக்க வீடில்லாமல் சாமான்ய மக்கள் அல்லாடுகின்றனர். இத்தகைய துயரத்தை தாளாமல் மாற்றம் காண, கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல் சிஐடியு ஊழி யர்கள் நடக்கிறார்கள். இந்த நடைபயணம் மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும். மக்களின் மனங்களை வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்திற்கு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன் தலைமை தாங்கினார். முறைசாரா சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் கருணா கரன் உள்ளிட்டோர் பேசி னர். காம்ரேட் கேங்க் ஸ்டார் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.