பொன்னேரி,மே 20-
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில், விபத்து, திருட்டு, கேட்பாரற்று கிடந்த வாகனம், மது போதையில் வாகனம் பறிமுதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.