சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையார் அஜிதாபர்வீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.