districts

img

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம், டிச.28- நூறு நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் (பிடிஒ) அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், ஒன்றிய பொருளாளர் உமா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை ஒத்தி வைத்து களைந்து சென்றனர்.