districts

வராண்டா ரேஸ்’ மையம் ஓராண்டு நிறைவு விழா

கிருஷ்ணகிரி,ஜூன் 15-  

    வராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

     இதில் பங்கேற்ற மாநிலங்களை உறுப்பினர் மு. தம்பிதுரை பேசுகையில், “இப்பயிற்சி மையம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், தங்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

    இந்த மையம் தொடங்கி ஓராண்டுக் குள் பலரை அரசு பணியாளர்களாக உரு வாக்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகமுள்ள இந்த சூழலில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று, அரசு பணியாளராக பொறுப்பேற்று மக்க ளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் எம்எல்ஏ., ராஜேந்திரன், ரவிச்சந்திரன், வெற்றிச் செல்வன் கலந்து கொண்டனர்.  

   முன்னதாக அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனபால் வரவேற்றார். பயிற்சி மையத்தின் கிளை மேலாளர் கலையரசன் நன்றி கூறினார்.