districts

img

திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு ஆதரவாக வரலட்சுமி மதுசூதனன் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு, ஏப்.2- இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத் திற்குட்பட்ட ஆலப்பாக்கம், மேலமையூர் மற்றும் வல்லம் உள்ளிட்ட ஊராட்சிகளில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பு நடைபெற்றது.  வீடுகள்,கடைகள் மற்றும் வணிக வளா கங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். மேலமையூர் ஊராட்சியில் பூ கட்டி வியாபாரம் செய்து வரும் பெண்ணிடம் வாக்கு சேகரிக்க சென்ற சட்டமன்ற உறுப்பி னர் வரலட்சுமி மதுசூதனன், கடந்த 10 ஆண்டு களில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையினால்,சிறு மற்றும் பெரும் வியாபாரிகள்,பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பூக்களை தொடுத்தவாரே எடுத்துரைத்து,திமுக வேட்பாளர் செல்வத்திற்கு வாக்குகள் சேகரித்தார். காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய அவைத்தலைவர் வி.ஜி.திருமலை,ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், வட்ட செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரவி, விசிக  நிர்வாகிகள் முனியன், ஆனந்தராஜ்,காங்கிரஸ் கட்சி நிர்வாகி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன் சிந்தியா சரவணன், பரிமளா ஜெயசங்கர்,ஒன்றிய கவுன்சிலர் நிந்துமதி, பிரேமலதா பிரேம்குமார்,சங்கமித்திரை கருணாகரன்,மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் உள்ளிட்டகூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.